இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று (டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை) மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்று (டிசம்பர் 8) இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதேபோல, ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (டிசம்பர் 8) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் அடிலெய்டு போட்டியில் தோல்வியடைந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிரணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த கேப்டன் முகமது அமான் தலைமையிலான இளம் இந்திய அணி என இந்த நாள் (டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை) இந்திய அணிக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.