முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இருவர் அரைசதம்; முதல் நாளில் மே.இ.தீவுகள் 250 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 23 நவம்பர், 2024 at 12:27 PM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மிக்கில் லூயிஸ் அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 3 ரன்கள் மற்றும் 10 ரன்களில் முறையே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 11 ரன்களுடனும், ஜோஷ்வா டா சில்வா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →