ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்

DIN

ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நைல் விலகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த வருடம் மும்பை அணியிலும் அதற்கு முன்பு ஆர்சிபி, கேகேஆர், தில்லி ஆகிய அணிகளிலும் அவர் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

34 வயது நாதன் கோல்டர் நைல் இந்த வருட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் கொடுத்தார். இந்நிலையில் காயம் காரணமாக நாதன் கோல்டர் நைல் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இதையடுத்து ஆல்ரவுண்டர் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT