ஐபிஎல்

ஐபிஎல் 2022: டாஸ் வென்றால் என்ன முடிவெடுப்பது?

பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. 

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் இலக்கை விரட்டும் விதமாக முதலில் ஃபீல்டிங் செய்வதையே தேர்வு செய்கின்றன.

இதற்கு இரு காரணங்கள்.

டி20யில் இலக்கை விரட்டுவது எளிது.

இன்னொன்று பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. 

ஐபிஎல் 2022 போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் 2-வதாக பேட்டிங் செய்த 7 அணிகள் வெற்றி பெற்றன.

கடைசி 6 ஆட்டங்களில் நிலைமை மாறிவிட்டது. 6-ல் 4 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 

இதனால் இனி வரும் ஆட்டங்களில் டாஸ் வெல்லும் அணிகள் என்ன முடிவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நவி மும்பையில் இதுவரை நடைபெற்ற 4 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 முறையும் இலக்கை விரட்டிய அணிகள் 2 முறையும் வென்றுள்ளன. இதனால் இன்றைய தில்லி - லக்னெள ஆட்டத்தின் முடிவு நிச்சயம் பல புதிய பாடங்களை அணிகளுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

டாஸ் வெல்லும் அணிகள், முதலில் ஃபீல்டிங் செய்வதை விரும்பினாலும் எல்லா நேரமும் அவர்கள் எண்ணப்படி அமைந்துவிடுவதில்லை. இதற்குக் கடைசி 6 ஆட்டங்களே உதாரணம். ஐபிஎல் போட்டியின் அடுத்தக் கட்டம் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்த கட்டணத்தில் ட்ரோன் சான்றளிப்பை அளிக்கும் தேசிய சோதனை மையம்

இதையும் எதிா்கொள்வோம்!

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை: துணை முதல்வா் வெளியிட்டாா்

கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு

SCROLL FOR NEXT