செய்திகள்

தமிழகத்தின் 16 வயது குகேஷ்: இந்தியாவின் நெ.3 செஸ் வீரர்!

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நெ.3 வீரராக முன்னேற்றம் அடைந்துள்ளார்.

DIN

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நெ.3 வீரராக முன்னேற்றம் அடைந்துள்ளார்.

செஸ் தரவரிசையில் 2700 புள்ளிகளைக் குறைந்த வயதில் அடைந்த இந்திய வீரர் என்கிற பெருமையைச் சமீபத்தில் அடைந்தார் 16 வயது குகேஷ். உலகளவில் 3-வது இளம் வீரர். 2019-ல் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் (12 வயது) என்கிற சாதனையைப் படைத்தார் குகேஷ். உலகளவில் 2-வது இடம். 2700 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த குகேஷுக்குப் பிரபல செஸ் வீரர்களான கார்ல்சனும் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டு தெரிவித்தார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருடைய ஈஎல்ஓ தரவரிசை 2714 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவின் நெ.3 வீரராக இருந்த விதித் குஜ்ராத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் புதிய நெ.3 வீரராக முன்னேறியுள்ளார் குகேஷ். உலகளவில் 11 இடங்கள் முன்னேறி 27-ம் இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் (2756) உலகளவில் 13-ம் இடத்திலும் மற்றொரு இந்திய வீரரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா (2724) 24-ம் இடத்திலும் உள்ளார்கள். கடந்த 5 வருடங்களில் முதல்முறையாக இந்தியாவின் சிறந்த மூன்று வீரர்களில் ஆனந்த், ஹரி கிருஷ்ணா, விதித் ஆகிய மூவரைத் தவிர மற்றொருவர் இடம்பெற்றுள்ளார். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்றைய 5-வது சுற்றில் முன்னாள் உலக நெ.2 வீரர் அலெக்ஸி ஷிரோவை வீழ்த்தினார் குகேஷ். இதன்மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 

இந்தியா பி வீரர்களுடன் குகேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

SCROLL FOR NEXT