செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி

DIN

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் 2025-ல் நடைபெறவுள்ளது.

2013-க்குப் பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை 2025-ல் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த நான்கு வருடங்களில் நான்கு ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 2024-ல் வங்கதேசத்தில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன.

2025-ல் இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி. ஐசிசி மகளிர் போட்டியை இந்தியா 5-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 2013-ல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தியது. 2025 உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இங்கிலாந்தில் 2026-ல் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 12 அணிகள் பங்கேற்கின்றன. 2026-ல் இலங்கை அணி தகுதி பெற்றால் இலங்கையில் முதல் மகளிர் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி டி20 கிரிக்கெட்டாக நடைபெறும். ஆறு அணிகள் பங்கேற்கின்றன. 

ஐசிசி மகளிர் போட்டிகளின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT