முகப்பு
செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் 2025-ல் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
2022 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி
பகிர்:

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் 2025-ல் நடைபெறவுள்ளது.

2013-க்குப் பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை 2025-ல் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த நான்கு வருடங்களில் நான்கு ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 2024-ல் வங்கதேசத்தில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன.

2025-ல் இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி. ஐசிசி மகளிர் போட்டியை இந்தியா 5-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 2013-ல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தியது. 2025 உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இங்கிலாந்தில் 2026-ல் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 12 அணிகள் பங்கேற்கின்றன. 2026-ல் இலங்கை அணி தகுதி பெற்றால் இலங்கையில் முதல் மகளிர் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி டி20 கிரிக்கெட்டாக நடைபெறும். ஆறு அணிகள் பங்கேற்கின்றன. 

ஐசிசி மகளிர் போட்டிகளின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →