FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் தேர்வு

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக...

Updated On : 3 செப்டம்பர் 2022, 12:00 pm IST
பகிர்:

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2013 முதல் 2019 வரை முதலில் பணியாற்றினார் ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி. அந்தக் காலக்கட்டங்களில் 5 முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2016-ல் ஐபிஎல் போட்டியை வென்றது. 2021-ல் சன்ரைசர்ஸ் அணியின் இயக்குநராக மூடி நியமிக்கப்பட்டார். இந்த வருடம் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். எனினும் கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021-ல் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது.  

இதையடுத்து சன்ரைசர்ஸ் - டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. 2023 ஜனவரியில் தொடங்கவுள்ள ஐஎல்டி20 போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியின் இயக்குநராக டாம் மூடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் லாரா பணியாற்றினார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments