செய்திகள்

3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும்: ஸ்டோக்ஸ் விருப்பம்

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று...

DIN

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்  விருப்பம் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவெடுக்கவுள்ளன.   

இந்நிலையில் ட்விட்டரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: அவருக்கு (எலிசபெத்) விளையாட்டு பிடிக்கும். அவருடைய நினைவாக டெஸ்டில் விளையாடுவதை கெளரவமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். 

டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT