ஆசிய கோப்பை நாளை (ஆக.30) துவங்க உள்ளது. பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசியக் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக் கோப்பை அணியில் யார்யார் எல்லாம் இடம்பெறுவார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆசியக் கோப்பை அணி தேர்விலுமே பலரும் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்க: ரெட் கார்டு வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர்!
இந்நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது: அணியாக சிறப்பாக இருக்க வேண்டுமெனில் சிலர் தேர்வாகாமல் போவது நடக்கும். அப்படி தேர்வாகாமல் போனவர்களிடம் நானும் திராவிட்டும் இதனால்தான் நீங்கள் அணியில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிப்போம். ஒவ்வொரு பிளேயிங் லெவன் தேர்வின்போதும் இதைத்தான் செய்கிறோம். தனித்தனியாக ஒவ்வொரு வீரர்களிடமும் நீங்கள் ஏன் தேர்வாகவில்லை என்பதை விளக்குவோம்.
இதையும் படிக்க: மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மூத்த வீரர் அணியில் சேர்ப்பு!
எனக்கு பிடிக்காததால் ஒருவரை அணியில் எடுக்கமாட்டேன் அப்படியெல்லாம் இல்லை. கேப்டன்சி (தலைமைப் பண்பு) என்பது ஒருவருக்கு பிடிக்கும் பிடிக்காது என்பதை பொறுத்து அமைவதில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கும். அதேபோல ஒருவர் அணியில் இடம்பெறாமல் போவது அதிர்ஷடத்தை பொறுத்தது. எல்லா முடிவுகளும் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?
2011 உலகக் கோப்பை அணியில் நான் தேர்வாகவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது யுவராஜ் சிங் என்னை அவரது அறைக்கு அழைத்து இரவு உணவு உண்ண வெளியே கூட்டிச் சென்றார். அணியில் இல்லாதது குறித்து அவர் விளக்கமளித்தார். அதனால் எனக்கு அணி தேர்வு குறித்து அனுபவம் இருக்கிறது என்று கூறினார்.