தமிழ்நாடு

சிதம்பரம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுப் பார்த்தார் எம்.எல்.ஏ.

DIN

சிதம்பரம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுப் பார்த்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன்.

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த 22 ஆம் தேதி முதல் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் சார்பில் நாள்தோறும் மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு இருப்பு உள்ள மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மதிய உணவிற்காக தயாராக இருந்த உணவினை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். 

மக்களுக்கு தடையின்றி நாள்தோறும் உணவு வழங்கவும் நகராட்சி ஆணையரை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாராஜன், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT