திருப்பூரில் 1,275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,275 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,275 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெ.கவின்பட்டேல் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் குடோன் எடுத்துத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த் தலைமையிலான காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கவின்பட்டேலின் குடோனில் சோதனை நடத்தினர். இதில், தடைசெய்யப்பட்ட 1,275 புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல் துறையினர் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.