முகப்பு
தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு இலவசப் பயணம்; மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: அரசு

கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. 

அதன்படி தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயணச் சலுகை:

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிரின் நலன் கருதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நகர்புற அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →