முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தது.

மேலும், தற்போதைய சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஜாமீன் மறுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →