தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி

DIN

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையடுத்து, சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினார். 

சேப்பாக்கம் அரசினர் மாளிகையில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். 

முன்னதாக, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT