தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

DIN

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை  வழங்கப்பட்டிருப்பதால், செவ்வாய்க்கிழமை (டிச.13) தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிக் கட்டடங்களின் நிலைத்தன்மை, பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல், மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாதுகாப்பான  கல்வி கற்கும் சூழ்நிலைகளை உறுதி செய்திடும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள்  நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கவும் மற்றும் பள்ளி நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT