முகப்பு
தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: கல்வித் துறை

மழைக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள்  நாளை (டிச.17) இயங்கும் என பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
மழைக்காக 9ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை (டிச.17) வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்துவகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →