தமிழ்நாடு

இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?

DIN

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வரவுள்ளார்.

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிவடைந்தவுடன், ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அப்போது பிரதமரை சந்திக்க இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களது சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை.

இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர், இபிஎஸ் - ஓபிஎஸை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா? நேரம் ஒதுக்கினால் ஒன்றாக சந்திப்பாரா? இல்லை தனித்தனியாக சந்திப்பாரா? என்ற பல கேள்விகளுக்கு மாலை பதில் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT