தமிழ்நாடு

பாஜகவை விமர்சித்த பொன்னையன்: முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்

DIN

பாஜக தொடர்பாக பொன்னையன் தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசும்போது அதிமுகவைப் பயன்படுத்தி பாஜக வளர முயற்சிப்பதாகவும், பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருளானது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது சொந்தக் கருத்து எனத் தெரிவித்தார். 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக தொடர்பாக பொன்னையன் பேசியதாக வெளிவந்த கருத்து கட்சியின் கருத்தல்ல எனவும், அவை பொன்னையனின் சொந்தக் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த பாஜகவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT