முகப்பு
தமிழ்நாடு

6 நாள்களில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

​பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:


பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தன. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தியதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் விலை ரூ. 3.70 மற்றும் டீசல் விலை ரூ. 3.75 உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 104.90-க்கும், டீசல் ரூ. 95-க்கும் விற்பனையாகிறது.

தில்லி:

பெட்ரோல் - ரூ. 99.11
டீசல் - ரூ. 90.42

கொல்கத்தா:

பெட்ரோல் - ரூ. 108.53
டீசல் - ரூ. 93.57

மும்பை:

பெட்ரோல் - ரூ. 113.88
டீசல் - ரூ. 98.13

முழு கட்டுரையைப் படிக்க →