கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிசா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிஸா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 ‘அசானி’ புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒடிஸா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஸா கடற்கரை பகுதிகளில் மே 10-ம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த புயல்    வடக்கு ஆந்திர கடற்கரையை நெருங்குவதற்கு முன் வடகிழக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT