'பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்': அண்ணாமலை
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
“பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.