தமிழ்நாடு

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் கடையில் தீ: பொருள்கள் நாசம்

DIN

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்தில், பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பெரியசாமி என்பவர்  பூஜைப் பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாராம். 

இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலையில் கடைத் தீப்பிடித்து எறிந்ததாம்.  இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இத்தீவிபத்தில் கடையில் உள்ள அனைத்து பூஜைப் பொருள்கள் மற்றும் கொலு பொம்மைகள் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து  மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

மது போதையில் ரகளை: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT