தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தியுள்ளதையடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது:
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை ரூ.10 குறைவாகும்.
விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.
தற்போதுள்ள நிறைகொழுப்பு பால்(Full cream ஆரஞ்சு நிறம்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கு புதுப்பிக்கப்படும்.
இதையும் படிக்க: துணியைக் கட்டித் தண்ணீரை அகற்றி... மதுரை ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் சூப்பர் டெக்னிக்!
நிறைகொழுப்பு பால் பொதுமக்கள் 40 சதவீதமும், வணிகரீதியாக 60 சதவீதமும் பயன்படுத்துகின்றனர். பொது நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைந்து இருந்தார் என்று அமைச்சர் தெரிவித்தார்