முகப்பு
தமிழ்நாடு

திருச்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாந்தன், முருகன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் இருந்து சாந்தன் மற்றும் முருகன் நேற்று விடுதலையாகினர்.

Updated On : 13 நவம்பர் 2022, 10:44 am IST
பகிர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் இருந்து சாந்தன் மற்றும் முருகன் நேற்று விடுதலையாகினர். இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதலைக்குப் பிறகு திருச்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் மற்றும் முருகன் நளினி உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்த முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

இவர்கள் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், விடுதலைக்குப் பிறகு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

Advertisement

Advertisement

விடுதலையான இருவரும் திருச்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் போது, விடுதலை மகிழ்ச்சி என கை அசைத்து இரு கையையும் சேர்த்து கும்பிட்டபடியே சிரித்துக்கொண்டே இருவரும் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments