சீர்காழியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
சீர்காழியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மைய சமையல் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சீர்காழியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மைய சமையல் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட எட்டாவது வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுத்தர் ராஜ கணேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் வரவேற்றார்.
Advertisement
Advertisement
விழாவில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார். முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமயல் கூட புதிய கட்டடத்தை ஆர்டி எம் ஏ. ஜானகி திறந்து வைத்தார்.
இதையும் படிக்க | ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்!
இவ்விழாவில் கல்வித்துறை அதிகாரி மற்றும் நகர் மன்ற துணை தலைவர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் , நகர்மன்ற உறுப்பினர்கள் ராமு , வேல்முருகன் , முழுமதி, ஜெயந்தி, முபாரக், ராஜேஷ், பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.