முகப்பு
தமிழ்நாடு

ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

தமிழ்நாடு

ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை ஹிந்தி ஹால்டா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

ராமசாமி படையாச்சியார், தமிழக அமைச்சரவையிலும்  நாடாளுமன்ற மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.

ராமசாமி படையாச்சியார் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக் களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →