FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 17 வரை சிறப்பு சந்தை!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 9 ஜனவரி 2023, 9:29 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு (ஜன. 10) முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில், சிறப்பு சந்தை 10 நாட்கள் வரை நடத்தப்படும். 

இதில்,  கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இந்த சிறப்பு சந்தைக்காக கடைகள் ஏலம் விடப்படும். அதில், மார்க்கெட்டில் உரிமம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. 

Advertisement

Advertisement

அதன்படி, 3 ஏக்கரில் சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாகம் சார்பில் முடி வெடுத்த நிலையில், இன்று இரவு 12 மணி அளவில் இருந்து வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை அமைக்கப்பட உள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தையை ஏற்படுத்தி அங்காடி நிர்வாகமே பொறுப்பேற்று உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments