இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதுபோல பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் நிறைவாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
மேலும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கோரிக்கை நிறைவேற்றப்படாததையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
தொடர்ந்து, இன்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மூன்று மாதத்தில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.