முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இன்று(ஆக. 20) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 4:39 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 4:26 PM

தமிழகத்தில் இன்று(ஆக. 20) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 4:29 PM

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.