பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 
தமிழ்நாடு

தர்மபுரி தேவாலயம் காணொலி விவகாரம்: அண்ணாமலை மீது வழக்கு!

தர்மபுரி தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி பரவிவந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தர்மபுரியில் நடைபேற்ற 'என் மண் என் மக்கள்' பேரணியின்போது பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்தில் உள்ள மேரி மாதா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற அண்ணாமைலை கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அண்ணாமலைக்கும் அந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   

அவரைத் தடுத்த இளைஞர்கள் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இது தொடர்பான காணொலி வலைதளத்தில் பரவியது. அதில் மணிப்பூர் பிரச்னை குறித்து அண்ணாமலை விவரிக்கு முயல்வதும், 'உங்களுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது? இப்போதே நான் 10,000 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் காணொலியில் இடம்பெற்றது. 

கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 153 (A), 504 மற்றும் 505 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரியில் உள்ள பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT