சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்!
ரூ.1.67 கோடி மதிப்புள்ள 2,500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 1.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 2,500 கிராம் அளவுள்ள ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியா மற்றும் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 710 கிராம், 1,056 கிராம் மற்றும் 900 கிராம் ஆகிய அளவுகளில் தங்கத்தை பல்வேறு வடிவங்களில் சென்னை விமான சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.
ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் உயர் அதிகாரிகளின் விசாரணையில் உள்ளனர்.