நம்பி வந்த தொண்டர்களை திமுகவுக்கு அனுப்பி வைத்தவர் டிடிவி தினகரன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, அவர் மீது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டிருந்தார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”சுயநலத்தில் உண்மை முகம் வெட்டு வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் திமுகவையும் ,ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுக பற்றி பேச தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது இதுதான் தொண்டர்கள் மக்களின் தீர்ப்பாகும் .
2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, மக்களின் நம்பிக்கை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் கருத்தை யாரும் பொறுப்பெடுத்த அவசியம் இல்லை.
தமிழகத்தில் தன்னுடைய ஆளுமை தோல்வினாலும், தன்னுடைய தொடர் இயலாமைனாலும், தான் வகுக்கும் திட்டம் தோல்வியாலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு அது பொறாமையாக மாறி இன்றைக்கு இன்றைக்கு ஒரு தனிநபர் அரசியல் காழ்புணர்ச்சியால், பொறாமையால், இயலாமையால் பேசி வருவதை யாரும் பொறுப்படுத்தவில்லை.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில், திமுக உண்மை முகத்தை, குடும்ப வாரிசை, மன்னராட்சியை அழிந்து மீண்டும் ஜனநாயகத்தை மலர செய்யும் வகையில் ,மக்களாட்சி மலர வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இன்றைக்கு எடப்பாடியார் இயக்கத்தை மீட்டு, தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.
இன்றைக்கு அந்த லட்சியத்தை விலக்கி, பொதுநலன், மக்கள் நலம், தொண்டர் நலன் மறந்து ,சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக (தினகரன்) கருத்து சொல்லி உள்ளார். தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதுதான் ஜனநாயகம்.
மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபர் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது இதுதான் கடந்த கால வரலாறு. இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழை நிலை நிறுத்த எடப்பாடியார் மக்கள் பணியாற்று வருகிறார் .
குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து குடிமராமத்து திட்டம் , 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை செய்தார் .
ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கருத்து கந்தசாமி பேசிவரும் அவருக்கு சில வரலாறை நான் கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைக்கு வரலாற்று சாதனை மூலம் மக்களிடத்தில் மனதில் எடப்பாடியார் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி, மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சியை நிச்சயம் மலர செய்வார். அதற்கு உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம், உங்களுக்கு கவலை வேண்டாம்.
இன்றைக்கு அதிமுகவின் உண்மை விசுவாசிகள், விசுவாசத் தொண்டர்கள், மக்கள், வாக்காளர்கள் என அனைவரும் உங்கள் உண்மை முகத்தை புரிந்து கொண்டார்கள், எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை.
இன்றைக்கு உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள், புரிந்து கொண்டவர்கள் தற்போது விலகி சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும், பொதுநல மறந்து, சுயநலத்தோடு செல்பவர்கள் அரசியல் பாதையை வகுக்க முடியாது.
அவரை நம்பிவர்களெல்லாம் திமுகவிற்கு வழி அனுப்பி வைத்தார், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பல பேர் இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர்.
தஞ்சையில் கருத்து கந்தசாமியாக, கண்ணை மூடிக்கொண்டு பேசிய நபருக்கு சில கேள்விகளை வைக்கின்றேன். உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள்.
உங்கள் நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள் அவர்களை அரசியல் அனாதையாகி விட்டார்கள் அவர்கள் எதிர்காலம் என்ன பதில் சொல்லுங்கள்?
அதேபோல உங்களது தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டார்கள் அதற்கு பதிலை சொல்லுங்கள்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.