FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

வரும் அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

Updated On : 21 அக்டோபர் 2025, 10:56 am IST
கோப்புப்படம்
பகிர்:

வரும் அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரம் தொடர்பாக பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.

Advertisement

Advertisement

அடுத்து வரும் அக். 25/26 வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த மாத இறுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சக்கரமாக(புயலாக) வலுவடைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று(அக். 21) மழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களில் (நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை), ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

summary

Tamil Nadu Weatherman Pradeep John has said that a new low pressure area will form on October 25th and strengthen into a storm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments