கோப்புப்படம் 
தமிழ்நாடு

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

வரும் அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரம் தொடர்பாக பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.

அடுத்து வரும் அக். 25/26 வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த மாத இறுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சக்கரமாக(புயலாக) வலுவடைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று(அக். 21) மழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களில் (நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை), ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tamil Nadu Weatherman Pradeep John has said that a new low pressure area will form on October 25th and strengthen into a storm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT