மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 21) காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 7,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணை வரலாறில் ஒரே ஆண்டில் அணையின் நீர்மட்டம் ஏழாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை நேற்று(அக். 20) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! எங்கு அதிகம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.