2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சற்று முன்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர்.
அதன்படி புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தஸுக்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.