உலகம்

அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

DIN

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட 5 மாகாணங்களில் வெள்ளிக்கிழமை தாக்கிய சூறவாளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக  உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கென்டகி, இல்லினாய்ஸ், அர்கன்சாஸ் உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சூறாவளி தாக்கியது. இதனால் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன.

கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 74 பேர் சூறாவளியால் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி தாக்கிய நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT