முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
கோப்புப்படம்
பகிர்:

பிலிப்பின்ஸ் நாட்டில் இருவர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் உருமாறிய புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் இருந்து பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →