உலகம்

தாய்லாந்து: கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு

DIN

தாய்லாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தாய்லாந்தில்  இதுவரை 20 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (நவ-11) வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 7,305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 2,004,274 ஆக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 19,883 ஆகப் பதிவாகியிருக்கிறது.

மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த எல்லைகளில் கவனமாக செயல்படுவதால் கரோனாவின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் தாய்லாந்து மக்கள் தொகையான 6.9 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT