ஆப்கனில் 5 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்களை தலிபான்கள் புதன்கிழமை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்களை தலிபான்கள் புதன்கிழமை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான், முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது மற்றும் கொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இடைக்கால அரசின் பிரமரை நேற்று அறிவித்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலிபான்கள் கைது செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்; துணைப் பிரதமா் முல்லா பராதா்
ஆப்கனைவிட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.