முகப்பு
உலகம்

'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்

நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்
பகிர்:


மரியுபோல்: ரஷிய படைகளின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மரியுபோலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட கோர தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

மரியுபோல் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், இந்த திரையரங்கு மீது புதன்கிழமை ரஷிய படைகள் கோரத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தி மேக்ஸர் செயற்கைக்கோள் திங்கள்கிழமை எடுத்த புகைப்படத்தில், இந்த திரையரங்கு கட்டடத்தின் முன்னும் பின்னும், மிகப்பெரிய வெள்ளை எழுத்துக்களால் ரஷிய மொழியில் குழந்தைகள் என்று எழுதப்பட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரம்தான், மற்றப் பகுதிகளை விட ரஷிய படையெடுப்பால் உருகுலைந்து போயிருப்பதாகவும், ஏவுகணை மற்றும் குண்டு வீச்சுகளால் இதுவரை 2,300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரினால், ஒரு பக்கம் உயிராபத்துடன், குடிநீர், உணவு மருத்துவ வசதி பெற கடுமையான போராடி வருகிறார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலை ரஷிய படைகள் நடத்தவில்லை என்றும், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →