மும்பை: தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பிடம், தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் அலிஷா பார்கர், அளித்திருக்கும் பல்வேறு தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, மைஸாபின் என்பவருடன் தாவூத் இப்ராஹிமுக்கு திருமணமான நிலையில், பாகிஸ்தானின் பதான் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தாவூத் இப்ராஹிமின் முதல் மனைவியும் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம், தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசி வரும் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மற்றொரு பாதுகாப்பான இடத்துக்கு தாவூத் இப்ராஹிம் குடிபெயர்ந்து விட்டதையும்ட அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.