தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன் 
உலகம்

தாவூத் இப்ராஹிம் பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மருமகன்

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

ANI

மும்பை: தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பிடம், தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் அலிஷா பார்கர், அளித்திருக்கும் பல்வேறு தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, மைஸாபின் என்பவருடன் தாவூத் இப்ராஹிமுக்கு திருமணமான நிலையில், பாகிஸ்தானின் பதான் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் முதல் மனைவியும் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம், தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசி வரும் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் மற்றொரு பாதுகாப்பான இடத்துக்கு தாவூத் இப்ராஹிம் குடிபெயர்ந்து விட்டதையும்ட அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT