முகப்பு
உலகம்

நூலிழையில் உயிர் தப்பிய மும்பை தொழிலதிபர்-மனைவி

மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தொழிலதிபர் விகாஸ் ஓபராய், அவரது மனைவி காயத்ரி ஆகியோர் இத்தாலியில் நேரிட்ட கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
கோப்புப் படம்
பகிர்:


மும்பை: மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தொழிலதிபர் விகாஸ் ஓபராய், அவரது மனைவி காயத்ரி ஆகியோர் இத்தாலியில் நேரிட்ட கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பினர்.

தெற்கு சார்டினியா பகுதியில் நடந்த சாலை விபத்துகுறித்து விகாஸ் கூறுகையில், சாலையிலிருந்து எங்கள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறேன். மற்றொரு காரில் வந்த இரண்டு பேர் பலியாகினர் என்று தெரிவித்துள்ளார்.

நீல நிற லம்போகினியில் விகாஸ் ஓபராய் தனது மனைவியுடன் சென்று கொண்டிருக்கும்போது சிவப்பு ஃபெராரியில் வந்த தம்பதி, இவர்களது காரை முந்த முயன்றபோது நேரிட்ட விபத்தில், ஃபெராரியில் தீப்பற்றி அதிலிருந்த இருவரும் பலியாகினர்.

ஓபராய் மற்றும் அவரது மனைவி காயத்ரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த லம்போர்கினி விபத்தில் சிக்கி உருகுலைந்துள்ளது விடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →