உலகம்

அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம்: இந்தியா

DIN

ஈரானில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜைஸ்வால் தெரிவித்துள்ளார்.  

எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், 'ஈரான் வெடிக்குண்டுத் தாக்குதலை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் ஈரான் மக்களுக்கும் அரசுக்கும் ஆதரவாக இருப்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார். 

மேலும், 'உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்காகவும், காயப்பட்டோருக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்' எனவும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிராப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார். 

ஈரானின் துணை ராணுவத்தின் அதிரடி சிறப்புக்குழுவின் தளபதி காசிம் சுலைமான், அமெரிக்கா ஆளில்லா விமானத்தால் கடந்த 2020-ல் கொல்லப்பட்டார். அவரது நான்காவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT