உலகம்

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.

ஆஃப்கானிஸ்தானின் தலிபான் படைகள், பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டின் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து, ஆயுதத்துடன் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டன.

காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தலிபான் படைகள், ’பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளன’ என்று ஆஃப்கான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானத்தை ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தலிபான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ”எதிர்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் ஆயுதப் படைகள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கத் தயாராக உள்ளன, திரும்பவும் பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

12 people were killed in an attack by the Afghan Taliban on Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT