ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தினர் பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
Advertisement
Advertisement
அவர்களில் இதுவரை நான்கு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.
தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறையின் அடிப்படையில் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்தார்.
Pakistan said early Sunday (February 22, 2026) it carried out strikes along the border with Afghanistan, targeting hideouts of Pakistani militants it blames for recent attacks inside the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.