FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து - X
பகிர்:

பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் புதன்கிழமை பலியாகின.

இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவில் புதன்கிழமை காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அந்த பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், உள்ளே இருந்த மற்ற நோயாளிகள் மற்றும் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவில் இருந்த ஏர்-கண்டிஷனரின் கம்ப்ரஸர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புக் குழுவினர் முதல்கட்ட செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம், இஸ்லாமாத்தின் மிகப்பெரிய மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Fire at Pakistan's largest hospital! 15 newborns dead!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments