கீழடி 4 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க ஆபரணங்கள் கண்டிபிடிப்பு!

இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க
கீழடி 4 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க ஆபரணங்கள் கண்டிபிடிப்பு!

மதுரையை அடுத்த கீழடியில் தொல்லியல்துறை சார்பாக தொடர்ந்து நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தமிழக அரசின் வழ்க்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.

கீழடி நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில்  இதுவரை 15 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டப்பட்டதில் இதுவரை 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க ஆபரணங்கள் உட்பட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பலவிதமான பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com