மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

News image
Updated On :14 ஜூலை 2023, 1:16 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

ஆண்டு தோறும் வரும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி,   ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தைச் சுற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்கக் கொண்டுவரப்பட்டது. பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ரகு பட்டர்  கொடியேற்றினார். வெள்ளிக்கிழமை முதல் தேரோட்டம் வரை  தினமும் ஆண்டாள் ரங்க மன்னர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சியளித்து அருள்பாலிக்க உள்ளனர். தேரோட்டம் நிகழ்ச்சிகள்  கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

கொடியேற்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.