விபத்தில் ஓட்டுநர் சாவு
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் சுந்தரமூர்த்தி (60), பெங்களூரில் நடைபெற்ற விபத்தில்இறந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் சுந்தரமூர்த்தி (60), பெங்களூரில் நடைபெற்ற விபத்தில்இறந்தார்.
இவர் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் பெங்களூரு நைஸ்சாலையில் மினிலாரியை ஓட்டுச் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி எதிரே சென்ற, சரக்கு லாரி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூர்த்தி, விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.