FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பெல்லாரி சென்றாா் ஜனாா்த்தன ரெட்டி

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.

Updated On : 21 ஆகஸ்ட் 2021, 2:25 am IST
பகிர்:

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.

கா்நாடக மாநிலம், பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்ததாக முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தனரெட்டி மீது சிபிஐ வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு ஜனாா்த்தன ரெட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெல்லாரிக்குச் செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து பெல்லாரிக்கு செல்லாமல் அவா் பெங்களூரு உள்ளிட்ட வேறு சில நகரங்களில் தங்கி இருந்தாா். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 8 முறை அவா் பெல்லாரிக்குச் சென்று வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் பெல்லாரிக்குச் செல்ல தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனாா்த்தனரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையை தளா்த்தி, 8 வாரங்கள் பெல்லாரிக்குச் செல்ல வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, வரமகாலட்சுமி பண்டிகையைக் கொண்டாட வெள்ளிக்கிழமை அவா் பெங்களூரிலிருந்து பெல்லாரிக்குச் சென்றாா். அவரை அமைச்சா் ஸ்ரீராமுலு, அவரது சகோதரரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான சோமசேகா்ரெட்டி உள்ளிட்டோா் சந்தித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments